Wednesday, January 9, 2013

முனைவர். ச. மகாதேவன் தமிழ்த்துறைத் தலைவர்

                                   முனைவர். . மகாதேவன்
தமிழ்த்துறைத் தலைவர்

    சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். . மகாதேவன் 15 வயது முதல் தமிழகத்தின் முன்னணி இதழ்களில் எழுதியவருபவர் 20 வயதில் பாரதப் பிரதமரின் சத்பவனா தேசிய விருதையும்”  இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் தேசிய அங்கீகரிப்புச் சான்றிதழும் ரூ.10,000/- முதல்பரிசும் பெற்றவர்.  தமிழக அரசு தஞ்சையில் நடத்திய எட்டாம் உலகத்தமிழ் மாநாட்டில்புதுக்கவிதைகளில் சமுதாய நோக்குஎனும் கட்டுரை எழுதித் தமிழக முதல்வரின் தங்கப் பதக்கத்தைப் பெற்றவர்.  மதுபோதை ஒழிப்பு ஆய்வுக் கட்டுரைப் போட்டியில் தமிழக ஆளுநரின் விருதினைப் பெற்றவர்.  பாலம் அமைப்பின் இளம் சமூக சேவகர் விருது.  சென்னை அரிமா சங்கத்தின் டாக்டர் ராதா கிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது. பாலம் நிறுவனத்தின் சார்பில் லட்சியத்தம்பதியர் விருது உட்படப் பல்வேறு விருதுகள் பெற்றவர்.  தமிழக அரசின் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பாடநூல் ஆசிரியர்  தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்குகளில் 52 ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியுள்ளார்.  மெல்லத் தமிழ் இனி கட்டுரைப் போட்டியில் பத்மஸ்ரீ, கமல்ஹாசனிடமும் அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள் எனும் நூல்திறனாய்வுக்காக திரு. ரஜினிகாந்திடமும் விருதுகள் பெற்றவர்.  மீனாட்சி மிஷன் தமிழக ஆசிரியர்களிடம் நடத்தியமனதில்நின்றமாணவர்கள்”  எனும் கட்டுரைப் போட்டியில் மாநில முதலிடம் பெற்றவர்.  சென்னை கம்பன் கழகம் நடத்திய சீறாப்புராணக்கட்டுரைப் போட்டியில் மாநில முதலிடம் பெற்று நீதியரசர் மு.மு. இஸ்மாயிலிடம் விருது பெற்றுள்ளார்.  சன் தொலைக்காட்சியில் விசுவின் அரட்டை அரங்கம்  நிகழ்ச்சியில் உரையாற்றியுள்ளார்.  மகாபாரதி இணைய வலைப்பூவை 2011 சனவரி முதல் நடத்தி வருகிறார்.  நேர்மையும் திறமையும் இருந்தால் வாழ்வில் உதவ மனிதர்கள் காத்திருப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறார் பேராசிரியர் . மகாதேவன்.

No comments:

Post a Comment